வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுவருவதையிட்டு வெடி கொழுத்திக் கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடாத்தியதில் பல்கலைக்கழக மாணவர் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, யாழ்.பல்கலைக்கழகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியை வெடி கொழுத்தி கொண்டாடிய பல்கலைக்கழக மாணவர்கள் விடுதிக்குள் இராணுவத்தினர் நுழைந்து தாக்குதல் நடத்திவருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
முகப்பு தமிழீழச் செய்திகள்