செப்டம்பர் 16, 2013, திங்கட்கிழமை, ஜெனீவாவில் நடைபெற்ற நீதி வேண்டிய கவனஈர்ப்புப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்குமுகமாக இலங்கையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழின அழிப்பிற்கு நீதி வேண்டியும் சுதந்திரமான அனைத்துலக போர்க்குற்ற விசாரணையை வேண்டியும் பி. ப. 3:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை கனடிய மண்ணில் மக்கள் எழுச்சியோடு கவனயீர்ப்புப் பேரணி நடைபெற்றது.
எம் இனத்துக்காக நாம் இருக்கின்றோம் என்ற உணர்வு கொண்ட மக்களின் விடுதலை தாகம் தமிழீழ தேசம் விடியும் வரை ஓயாது எந்நாளும் என்பதை உணர்வு கொண்ட மக்கள் இந்த போராட்டங்களில் நிரூபித்து வருகின்றனர். உறுதி மொழி எடுத்து இனிதே இப்போராட்டம் நிறைவெய்தியது.
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!
மேலதிக தொடர்புகளுக்கு: கனடியத் தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 416.830.7703
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
முகநூல்: facebook.com/canadianncct