நேற்று (12.06.11) ஞாயிற்றுக்கிழமை அன்று மாலை 6.00 மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் கொளத்தூர் வரலட்சுமி நகர் பகுதியில் பரப்புரை கூட்டம் நடைப்பெற்றது. இக் கூட்டத்தில் கொளத்தூர் பகுதி ஒருங்கினைப்பாளர் ரவி, மற்றும் அப்பகுதி கட்சியினர் விஜி, தமிழ்செல்வன், தினேசு, காந்தி கணேசு, முரளி, வடிவேல், பழனி, ஜெகன்,ராஜா, மற்றும் பெரம்பூர் பகுதி கட்சியினர் ரேகன், அலெக்ஸ், எட்வின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழர் எட்வின் நாம் தமிழர் கட்சியின் கொள்கை, செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தார். இக் கூட்டத்தில் அப் பகுதி பெண்கள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.