வேலூரில் நாம் தமிழர் கட்சியினர் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல்

46

நேற்று வேலூரில் காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் ஈடுப்பட்டிருந்த நாம் தமிழர் கட்சியின் களப்பணியாளர்கள் செல்வக்குமார் மற்றும் சுந்தர மூர்த்தி ஆகியோர் மீது காங்கிரஸ் குண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடாது எனவும் மிரட்டியுள்ளனர். காங்கிரசு குண்டர்கள் தாக்கியதில் செல்வக்குமார் மற்றும் சுந்தர மூர்த்திக்கு பலத்த காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது. இச் சம்பவத்தை அடுத்து வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளனர்.

காங்கிரசு கட்சியின் இவ்வெறி செயல் வேலூர் காங்கிரசு வேட்பாளர் ஞானசேகரனின் தூண்டுதலாலே நடைபெற்றுள்ளது என அறியப்படுகிறது.

முந்தைய செய்திநேரலை அறிவுப்பு : நாளை காலை 9.00 மணிக்கு திருபெரும்பத்தூரில் நடைபெறவுள்ள தேர்தல் பரப்புரை நேரலை செய்யப்படும்
அடுத்த செய்திவேலூர் தேர்தல் பரப்புரை 9-4-2011