விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வது குற்றம் ஆகாது – தமிழக உயர்நீதிமன்றம் தீர்ப்பு.

43

கருத்துரிமை இயக்கம் சார்பில் திரு.புகழேந்தி தங்கராஜ் அவர்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் “கடந்த அக்டோபர் மாதம் விடுதலைப்புலிகள் மீதான தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்து இருந்தோம். பனகல் மாளிகை முன்பு இந்த இயக்கத்தை நடத்த காவல்துறை ஆணையரிடம்  அனுமதி கேட்டோம். ஆனால் அவர் அனுமதி தர மறுத்து விட்டார். தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று அதில் குறிப்பிட்டிருந்தார். காவல்துறை ஆணையரின் உத்தரவை ரத்து செய்து கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்’’ என்று தனது மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி திரு.சந்துரு முன்பு விசாரணைக்கு வந்தது.

அவர்,  “தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றம் ஆகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. எனவே விடுதலைப்புலிகளின் தடையை எதிர்த்து கையெழுத்து இயக்கம் நடத்துவது தவறு அல்ல. அரசியல் சட்டத்துக்கு எதிரானது அல்ல. இதனால் காவல்துறை ஆணையரின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுதாரர் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும்’’ என்று தீர்ப்பு கூறினார்.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] கனடாவின் டொராண்டோ நகரில் 12.03.11 அன்று “நாம் தமிழர்” தொடங்கப்பட்டு அறிமுக நிகழ்வு நடைபெற்றது.
அடுத்த செய்திஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து உச்ச நீதிமன்றத்தில் அமலாக்க பிரிவினர் அறிக்கை.