சுவிற்சர்லாந்தில் முத்துக்குமார், முருகதாஸ் ஆகியோருக்கு நினைவுத் தபால்தலை வெளியீடு

45

ஈழத் தமிழ்மக்களின் மீது சிறிலங்கா அரச படைகள் மேற்கொண்டிருந்த இனவழிப்புப் போரினை உடன் நிறுத்தக் கோரி, அக் காலப் பகுதியில், தமது இன்னுயிர்களை தியாகம் செய்திருந்த ஈகையாளர்கள் முத்துக்குமாருக்கும், முருகதாசனுக்கும், சுவிற்சர்லாந்தில் தபால்தலை வெளியிடப்பட்டுள்ளது.இந்த தபால்தலைகள் சூரிச் நகரில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது வெளியிடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக தமிழ் இளையோர் அமைப்பினர் அறியத் தருகையில்;


சுவிற்சர்லாந்தின் சூரிச் மானிலத்தில் 27-02-2011 (ஞயிற்றுக்கிழமை) மாலை லெப். கேணல் கௌசல்யன், உட்பட அவருடன் வீரச்சாவடைந்த போராளிகள், ஈகைப் பேரொளிகளான முத்துக்குமார், முருகதாஸ், உட்பட தமிழினவிடுதலைக்காக தீயில் தங்களின் உயிர்களை உருக்கியூற்றிய பதினேழு தியாகிகளையும், தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதியம்மாவையும் நினைவுகூர்ந்து வணக்க நிகழ்வு இடம்பெற்றது.தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிற்சர்லாந்துக் களையின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் பொதுச்சுடரேற்றி, தேசியக் கொடியேற்றப்பட்டு, அகவணக்கம் செலுத்தி, மேற்குறிப்பிட்டவர்களின் திருவுருவப்படங்களிற்கு மலர்மாலை அணிவித்து, மலரஞசலியும் செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக ஈகைப்பேரெளிகளான முத்துக்குமார், முருகதாஸ் ஆகியோரின் நினைவாக முத்திரைகள் வெளியிடப்பட்டன. இதனை சுவிற்சர்லாந்தின் தமிழ் இளையோர் அமைப்பினர் வெளியிட்டு வைத்தனர். இந்த முத்திரைகளை சுவிற்சர்லாந்தின் அஞசல் அனுப்புவதற்காகப் பயன்படுத்த முடியும். இதன்மூலம் தமழிர் பற்றிய அரசியல் நிலைப்பாட்டையும், தமிழினத்தைக் காப்பதற்காக தியாகம் செய்த தியாகிகளையும் ஏனைய இனத்தவர் அறிந்து கொள்ள வாய்ப்பாகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.சுவிற்சர்லாந்தின் தபாலத்திணைக்களத்தின் பாவனையாளர்கள் சுயமாக தபால்தலைகளை வடிவமைத்துக்கொள்ளும் புதிய வழிமுறையினடிப்படையில், ஈகையாளர்கள் முத்துக்குமாரையும், முருகதாசனையும், நினைவுகூர்ந்து தபால்தலை வெளியிட்டிருக்கும் இளையவர்களின் முயற்சிக்குப் பலரும் பாராட்டுத் தெரிவித்திருந்தனர்.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] திருநெல்வேலி மாவட்டம் சிவகிரியில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம்.
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு]வழக்கறிஞர் சங்க தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் அலைமகன் அவர்களுக்கு 75 எண்ணிற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும் – செந்தமிழன் சீமான்