ஐ.நா பொதுச்செயலாளர் செயலாளர் பான் கி மூன் மீது கல்வீச்சு

28

ஐ.ந செயலாளர் நாயகம் பான் கி மூன் மீது எகிப்திய தலைநகர் கெய்ரோவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.கெய்ரோவில் அரபு லீக் தலைமையகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் பான் கி மூன் பங்குபற்றினார்.அங்கிருந்து தஹ்ரிர் சதுக்கத்தை நோக்கிச் செல்ல அவர் வெளியே வந்த போது,லிபியாவில் ஐ.நா ஆதரவுடன் மேற்கொள்ளப்படும் கூட்டுப்படைகளின் தாக்குதலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய மக்களால் பான் கி மூன் மீது கற்கள வீசப்பட்டன. பான் கீ மூனுக்கு எதிரான கோஷங்களையும் அவர்கள் எழுப்பினர்.

இந்த தாக்குதலால் பான் கி மூனுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் மற்றொரு வாசல் வழியாக கார் மூலம் வேறு பாதையில் வெளியேறினார்.
எகிப்தின் முன்னாள் அதிபர் முபாரக்கிற்கு எதிராக பெரிய ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு அவரை பதவியிலிருந்து ராஜினாமாச் செய்ய வைத்ததில் தஹ்ரிர் சதுக்கம் பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம்.
அடுத்த செய்திதேர்தல் கண்காணிப்பு குழு மேற்கொண்ட வாகன சோதனையில் மதுரையில் ரூ.பத்து இலட்சம் பறிமுதல்.