[படங்கள் இணைப்பு]எம்.ஜி.ஆர் நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பாக மாலை அணிவித்து வீரவணக்கம்.

250

ஈழ விடுதலைக்கு உதவிய புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களது நினைவு நாளை முன்னிட்டு இராமநாதபுரம் நகர் நாம் தமிழர் கட்சி சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு.நாகேசுவரன் தலைமையில் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்நிகழ்வில் இராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் திரு.க.கி.பிரதாப்,திரு.ஆதித்ய சேக்கிழார் ,திரு.குமரவேல்  மற்றும் கீழக்கரை நகர் செயலாளர் திரு.பிரபாகரன்,திருப்புல்லாணி ஒன்றிய செயலாளர் திரு.வெண்குளம் ராசு கலந்து கொண்டு இராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பு உள்ள புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்கள்.

தொடர்புக்கு:9786960608,8807487482,7845437637

நாம் தமிழர் கட்சி,

இராமநாதபுரம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு

முந்தைய செய்திபடகு கவிழ்ந்து விபத்தில் பலியானவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் – சீமான்.
அடுத்த செய்திஇராமநாதபுரம் பொதுகூட்டம் 27-12-2010