செய்தி: இராஜீவ்காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்” நூல் வெளியீட்டு விழா – சீமான் சிறப்புரை | நாம் தமிழர் கட்சி
சிறைவாசி இரா.பொ.இரவிச்சந்திரன் எழுதி பா.ஏகலைவன் தொகுத்து வெளியிடும் “இராஜீவ்காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்” நூல் வெளியீட்டு விழா 10.01.2018 புதன்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை – வடபழனி, RKV அரங்கில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி திருமிகு. அரிபரந்தாமன் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கட்சி மற்றும் இயக்கத் தலைவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார். நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084