மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அன்புத்தங்கை பிரகலதா அவர்களின் தந்தை பெருமதிப்பிற்குரிய ஐயா துரைராஜ் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
(1/3)

இராணுவ அதிகாரியாக பணியாற்றி சேவை புரிந்த ஐயா துரைராஜ் அவர்களின் மறைவு
தங்கை பிரகலதாவிற்கு மட்டுமல்லாது மண்ணையும், மக்களும் நேசித்து நிற்கும் நம் அனைவருக்குமான இழப்பு.
(2/3)
ஈடு செய்ய முடியாத இழப்பினால் பெருந்துயருள்ள தங்கை பிரகலதாவிற்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயாவிற்கு எனது கண்ணீர் வணக்கம்!
(3/3)


