மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி – மகளிர் பாசறையின் திருப்பரங்குன்றம் தொகுதிச் செயலாளர் அன்புத்தங்கை ச.ஜெயந்தி அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா சி.பழனி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் தங்கைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா பழனி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!


