கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி – தகவல் தொழில்நுட்பப் பாசறையின் சமூக ஊடகப் பிரிவுப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சுபின் ஆன்றனி அவர்களின் அன்புத்தம்பி அபினாஸ் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பாசமிகு தம்பியை இழந்து வாடும் தம்பி சுபின் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தம்பி அபினாஸ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



