நாம் தமிழர் கட்சி – வீரத்தமிழர் முன்னணியின் திருச்சி மாவட்டச் செயலாளர் கு. குப்புசாமி அவர்களின் தாயார் அம்மா சரஸ்வதி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி கு. குப்புசாமி அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா சரஸ்வதி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



