நாம் தமிழர் கட்சி – விழுப்புரம் மாவட்டம், செஞ்சி சட்டமன்றத் தொகுதியின் மாவட்ட வணிகர் பாசறைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி சிவா அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா ம.கதிர்வேல் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பி சிவா அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தி பங்கெடுக்கிறேன்.
ஐயா ம.கதிர்வேல் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



