உயிருக்கினிய உறவுகள் அனைவருக்கும் அன்பும், வணக்கமும்!
வருகிற வைகாசி 4 ஆம் தேதி
மே 18 இனப்படுகொலை நாள்!
இம்முறை கோவையில் மாபெரும் தமிழினப் பேரெழுச்சிப் பொதுக்கூட்டம் கொடிசியா திடலில் ஞாயிற்றுக்கிழமை சரியாக மாலை 04 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
எப்போதும்போல எம்மினச்சொந்தங்கள் உங்களுடைய நிதி உதவியில்தான் நாம் தமிழர் கட்சி இவ்வளவு தூரம் இளைப்பின்றி இயங்கி வந்திருக்கிறது!
வலிமையாகவும், வளமையாகவும் எங்களோடு எம் மக்களே துணை நின்றிருக்கிறார்கள்!
இம்முறையும் திரள்நிதி திரட்சியின் மூலமாக உங்களால் இயன்ற நிதி பங்களிப்பைத் தந்து எங்களை வலிமைப்படுத்த வேண்டுமென்று அன்போடு வேண்டுகிறேன்.
நீங்கள் கொடுக்கும் இந்த வருமானம் காக்கும் இனமானம்!
துளித்துளியாய் இணைவோம் பெரும் கடலாகும் கனவோடு!
நாம் தமிழர்!
https://t.co/dvtzYazgGw
#Donate4Solidarity_May18



