நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு மண்டலம், தகவல் தொழில்நுட்பப் பாசறை மாநிலத் துணைச் செயலாளர் அன்புத்தம்பி கா.வெங்கட்ராமள் அவர்களின் தந்தை ஐயா காந்தி கலியராயர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி
வெங்கட்ராமன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, பெருந்துயரில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா காந்தி கலியராயர் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!



