இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி வட்டம், காரடர்ந்தகுடி குருநாதன் – கவிதா இணையரின் அன்புமகள் குரு.அனுஸ்ரீ அவர்கள்
தஞ்சாவூரில் நடைபெற்ற கராத்தே போட்டியில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற செய்தியறிந்து மகிழ்ச்சியும், மிகுந்த பெருமிதம் அடைந்தேன்.
தனித்திறனை மென்மேலும் வளர்த்து, வாழ்வில் இன்னும் பல சாதனைகள் புரிந்து சிகரம் தொட என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!



