நாம் தமிழர் கட்சி – பாபநாசம் சட்டமன்றத் தொகுதி, மாவட்ட மாணவர் பாசறை பொறுப்பாளர், அன்புத்தம்பி சூழியக்கோட்டை இர.விக்னேஸ்வரன் அவர்களின் தந்தை தமிழ்த்தேசியப் பற்றாளர், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர், ஐயா திரு. ரவிச்சந்திரன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.
பாசத்திற்குரிய தந்தையை இழந்து வாடும் அன்புத்தம்பி விக்னேஷ்வரன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா ரவிச்சந்திரன் அவர்களுக்கு
என் கண்ணீர் வணக்கம்!



