முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி, மண்டபம்…

0

நாம் தமிழர் கட்சி – இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதி, மண்டபம் மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்தப் பொருளாளர் அன்புத்தம்பி துளசிதாஸ் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தொடக்காலத்திலிருந்து தன்னை இணைத்துக்கொண்டு, துளியும் சமரசமின்றி களப்பணியாற்றி வந்த துளசிதாஸ் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.

தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி துளசிதாஸ் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திவடமாநிலங்களில் கிறித்துவப்பெருமக்கள் மீது நிகழ்த்தப்படும் மதவெறித்தாக்குதல்கள் ஒட்டுமொத்த நாட்டுக்குமான தலைகுனிவு!…
அடுத்த செய்திபொதுவாழ்வில் மக்களுக்காகவே அப்பழுக்கற்று வாழ்ந்து வரும் பெருந்தமிழர்! ஏழு ஆண்டுகாலம்…