நாம் தமிழர் கட்சி – முன்னாள் பாதுகாப்புப் படை வீரர் பாசறையின் மாநிலத் தலைவர் அன்புத்தம்பி லெ.பூமிநாதன் அவர்களின் அக்கா அம்மா லெ.நாகலெட்சுமி நாச்சியார் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பாசத்திற்குரிய அக்காவை இழந்து வாடும் அன்புத்தம்பி பூமிநாதன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும்,
உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய
ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா லெ.நாகலெட்சுமி நாச்சியார் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!


