‘உண்டியலில் காணிக்கை செலுத்துவதற்குப் பதிலாகப் பசியில் இருப்போர்க்கு வயிறார உணவு கொடுப்பதே கடவுளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும்’ என்று கற்பித்து வடலூரில் அணையா அடுப்பை ஏற்றி வழிகாட்டிய வள்ளல்..
வாடிய பயிரைக் கண்டு வாடிய உயிர்ம நேயர்..
சனாதனத்திற்கு எதிராக சமரச சன்மார்க்கம் கண்ட புரட்சியாளர்…
தமிழர்களின் சமத்துவ மெய்யியலை மீட்டெடுத்த திருவருட்செல்வர்..
உண்மை ஒளியைக் காண வடலூர் பெருவெளியை அமைத்த அருளாளர்..
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்கவென திருவருட்பா அருளிய தெய்வத் திருமகன்..
‘தமிழர் மெய்யியல் மீட்பர், திருவருட்செல்வர் வள்ளல் பெருமானார் திருப்புகழ் போற்றுவோம்!



