நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் சட்டமன்றத் தொகுதியின் மண்டலச் செயலாளர் மற்றும் கல்லுக்கூட்டம் பேரூராட்சி பத்தாவது வார்டு கவுன்சிலருமான அன்புத்தம்பி ரூபன் பொன்னுமணி அவர்களின் தாயார் அம்மா ரெத்தினம் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அன்னையை இழந்து வாடும் தம்பி ரூபன் பொன்னுமணி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர்க்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரில் பங்கெடுக்கிறேன்.
அம்மா ரெத்தினம் அவர்களுக்கு
என்னுடைய கண்ணீர் வணக்கம்!



