நாம் தமிழர் கட்சி – அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதி,மீமிசல் கோபால பட்டினத்தைச் சேர்ந்த செந்தமிழர் பாசறையின் சவுதி ரியாத் பகுதி பொறுப்பாளர் அன்புத்தம்பி கசாலி அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா அப்துல் முத்தலிப் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து வாடும் தம்பி கசாலி அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா அப்துல் முத்தலிப் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



