மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து சீமான் எழுச்சி உரையாற்றும் தொடர்முழக்க பட்டினிப் போராட்டம்.

95

தஞ்சைமண்டல நாம்தமிழர் சார்பில்,மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து ,இயற்கை வேளாண் அறிவியல் அறிஞர் பெருந்தமிழர் நம்மாழ்வார் தலைமையில்,செந்தமிழன் சீமான் எழுச்சி உரையாற்றும் தொடர்முழக்க பட்டினிப் போராட்டம் 26.07.2013 அன்று திருவாரூர் வடக்கு மாவட்டம் ,குடவாசலில் நடைபெற உள்ளது.இதற்கான பரப்புரைப் பயணம் குடவாசல் பகுதியில் 07.07.2013 அன்று குடவாசல்,நன்னிலம்,திருவாரூர் பகுதியைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி தம்பிகளால் நடத்தப்பட்டது.

திருவாரூர் பால்ராசு அய்யா,குடவாசல் செல்வமணி,சபேசன் ,நன்னிலம் அன்புசெல்வன்,ஜானகிராமன்,செல்

லப்பா ஆகியோர் உரையாற்றினர்.

முந்தைய செய்திமீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்து பொதுமக்களிடம் பரப்புரை
அடுத்த செய்திமாணவர் பாசறை நடத்தும்கொள்கை விளக்க பொதுக்கூட்டம்(14/7/2013) .