நாம் தமிழர் கட்சி செஞ்சி தொகுதி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட 40-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளை எந்த நிகழ்வையும் செய்யவிடாமல் தடுத்து, கட்சி அலுவலகத்தை கூட திறக்க விடாமல், வலுக்கட்டாயமாக கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளனர். இந்த நிகழ்வு செஞ்சி பகுதி பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.