முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி, வேர்க்கிளம்பி பேரூராட்சியைச் சேர்ந்த…

0

நாம் தமிழர் கட்சி – கன்னியாகுமரி, வேர்க்கிளம்பி பேரூராட்சியைச் சேர்ந்த களச்செயற்பாட்டாளர் அன்புத்தம்பி விசு (எ) விஜயன் அவர்கள் உயிரிழந்துவிட்டார் என்ற துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.

மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடிவரும் நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் தொடக்காலத்திலிருந்து தன்னை இணைத்துக்கொண்டு, துளியும் சமரசமின்றி களப்பணியாற்றி வந்த விசு (எ) விஜயன் அவர்கள் நம்மை விட்டு பிரிந்திருப்பது பெருந்துயரத்தை அளிக்கிறது.

தம்பியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

தம்பி விசு (எ) விஜயன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திபுத்தம் புதிய ஆண்டின் தொடக்க நன்னாளில், மக்கள் உள்ளங்களில் நம்பிக்கையும்,…
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்