நாம் தமிழர் கட்சி – திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதி குன்னியூர் பகுதியைச் சேர்ந்த தமிழ் மீட்சிப் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி மோ.செ.வெற்றிவேல் முருகன் அவர்களின் சிற்றன்னை அம்மா அம்பிகா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
சிற்றன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் மோ.செ.வெற்றிவேல் முருகன் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன் அம்மா அம்பிகா அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



