கடலூர் மாவட்டம், திட்டக்குடி தொகுதி, பெ.பொன்னேரி ஊரைச் சார்ந்தவரும் செந்தமிழர் பாசறை சவூதி அரேபியாவின் சுபைல் மண்டலப் பொறுப்பாளருமான அன்புத்தம்பி நடராசன் அவர்களின் தாயார் திருமதி செ.பழனியம்மாள் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த துயருற்றேன்.
அம்மாவை இழந்து வாடும் தம்பி நடராசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், உறவுகளுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, அவர்களின் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா செ. பழனியம்மாள் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



