நாம் தமிழர் கட்சி – இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர் அன்புத்தம்பி கரிகாலன் சூர்யா அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா செ.ராஜசேகர் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
ஆருயிர் தந்தையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா செ.ராஜசேகர் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



