மூத்த அரசியல் தலைவர் ஐயா நல்லகண்ணு அவர்கள் உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையறிந்து, இன்று (29-08-2025) நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிகிச்சைப் பெற்றுவரும் ஐயா நல்லகண்ணு அவர்களைச் சந்தித்து, மருத்துவர்களிடம் அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார்.