நாம் தமிழர் கட்சி – சென்னை அம்பத்தூர் மண்டலத்தைச் சேர்ந்த மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி க.பூபேசு அவர்களின் அன்புத்தங்கை கல்பனா ஏசுதாஸ் அவர்கள் இன்று 12-07-2025 மறைவெய்திய துயரச் செய்தியறிந்து, அம்பத்தூர் தொழிற்பேட்டை கச்சினாங்குப்பம் கன்னியம்மன் கோயில் தெருவில் உள்ள அவரது இல்லத்திற்கு,
நேரில் சென்று இறுதி வணக்க நிகழ்வில் பங்கேற்று மலர் வணக்கம் செலுத்தி, அன்புத் தங்கையை இழந்து வாடும் தம்பி பூபேசு அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்து, துயரில் பங்கெடுத்தேன்.
அன்புத் தங்கை கல்பனா ஏசுதாஸ் அவர்களுக்கு என் கண்ணிர் வணக்கம்!






