நாம் தமிழர் கட்சி – தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்றத் தொகுதி மாவட்டச் செயலாளர் அன்புத்தம்பி செ.கவிதாசன் அவர்களின் தாயார் அம்மா செ.ஜோதிமணி அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
ஆருயிர் அன்னையை இழந்து பெருந்துயரில் வாடும் தம்பிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
அம்மா செ.ஜோதிமணி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



