நாம் தமிழர் கட்சி – திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்தவரும், செந்தமிழர் பாசறை ஓமன் – மசுகட் சீப் பகுதிப் பொறுப்பாளருமான அன்புத்தம்பி மா.முத்துக்குமார், களப்பால் ஊராட்சி கிளைப் பொறுப்பாளர் அன்புத்தம்பி மா.பாலமுருகன் ஆகியோரின் தந்தையும்,
செந்தமிழர் பாசறை ஓமன் தலைவர் அன்புத்தம்பி மு.முத்துமுருகன் அவர்களின் சித்தப்பாவுமான மதிப்பிற்குரிய ஐயா மாரியப்பன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனையடைந்தேன்.
அப்பாவை இழந்து பெருந்துயரில் வாடும் அன்புத்தம்பிகள் மா.முத்துக்குமார், மா.பாலமுருகன் அவர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா மாரியப்பன் அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!


