தலைமை அறிவிப்பு – பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு வீரவணக்க நிகழ்வு

23

க.எண்: 2025030288

நாள்: 30.03.2025

அறிவிப்பு:

பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு
வீரவணக்க நிகழ்வுதலைமை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாள்:
03-04-2025 காலை 10 மணி

இடம்:
பெருங்காமநல்லூர் நினைவிடம்
மதுரை (உசிலம்பட்டி)

குற்றப்பரம்பரை என்ற பட்டத்தைச் சுமத்தி, கைரேகைச் சட்டத்தைத் திணித்த ஆங்கில ஏகாதிபத்தியத்தை எதிர்த்து வீரக்கிளர்ச்சி செய்து, இரத்தம் சிந்தி உயிர் ஈகம் செய்த நம்மின முன்னோர்களான பெருங்காமநல்லூர் போராளிகளுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வருகின்ற 03-04-2025 அன்று காலை 10 மணியளவில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

 

இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திதலைமை அறிவிப்பு – மாநில ஒருங்கிணைப்பாளர் நியமனம்
அடுத்த செய்திதலைமை அறிவிப்பு – மே 18, இனப் படுகொலை நாளையொட்டி இன எழுச்சி நாள் 2025!