தலைமை அறிவிப்பு – அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன் கலந்துரையாடல்

44

க.எண்: 2025030276

நாள்: 28.03.2025

அறிவிப்பு:

புதிய கட்டமைப்பின்படி நியமிக்கப்பட்டுள்ள
திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்களுடன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
செந்தமிழன் சீமான் அவர்கள்
சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்
நாள்:
30-03-2025 காலை 10 மணிஇடம்:
ஷான்ஸ் உண்டுறை விடுதி (Hotel Shaans)
திருச்சி

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் புதிய கட்டமைப்பின் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ள கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்ட மற்றும் தொகுதிப் பொறுப்பாளர்களை, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வருகின்ற 30-03-2025 அன்று காலை 10 மணியளவில் திருச்சி, தென்னூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ஷான்ஸ் உண்டுறை விடுதி (Hotel Shaans) அரங்கில் சந்தித்து கலந்துரையாடவிருக்கிறார்.

இந்நிகழ்வில் மேற்குறிப்பிட்டுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்

முந்தைய செய்திபுனித ரமலான் மற்றும் புனித வெள்ளி நாளன்று மதுக்கடைகளை மூட வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஅரசுப்பள்ளியில் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களை உடனடியாகப் பணி நிலைப்படுத்த வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்