முதுபெரும் பொதுவுடைமை தலைவரும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான மரியாதைக்குரிய ஐயா சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்தேன்.
ஐயா அவர்களை இழந்துவாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கின்றேன்.
ஐயா சீதாராம் யெச்சூரி அவர்களுக்கு என் கண்ணீர் வணக்கம்!



