முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

நாம் தமிழர் கட்சி – சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதி,…

0

நாம் தமிழர் கட்சி – சென்னை மாவட்டம், சோழிங்கநல்லூர் தொகுதி, பள்ளிக்கரணை பகுதி இளைஞர் பாசறைச் செயலாளர் அன்புத்தம்பி ச.தங்கராஜ் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில் இணைந்து, துடிப்புடன் களப்பணியாற்றிவந்த தம்பி தங்கராஜ் அவர்களை இழந்திருப்பது மிகுந்த மனத்துயரத்தைத் தருகிறது.

தம்பியை இழந்து வாடும் பெற்றோருக்கும், அவரது இணையர் மற்றும் குழந்தைகளுக்கும், குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து துயரத்தில் பங்கெடுக்கிறேன்.

அன்புத்தம்பி தங்கராஜ் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!

முந்தைய செய்திநிலவுரிமையை காக்க போராடும் ஏகனாபுரம் மக்கள் மீது பொய் வழக்கு…
அடுத்த செய்திதமிழர்களுக்கு வேலைவாய்ப்பு தர மறுக்கும் தனியார் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு…