மாணவச்செல்வங்களுக்கு அன்பு நிறைந்த வாழ்த்துகள்!
இன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவிருக்கும் எனதன்பு மாணவ – மாணவியர் அனைவரும் துணிவுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் தேர்வினை எதிர்கொள்ள வேண்டும். எச்சூழலிலும், எதற்காகவும் பதற்றமடையமால், முழுமையான நம்பிக்கையுடன் நீங்கள் துவங்கும் எந்தவொருச் செயலுமே பாதி வெற்றி பெற்றதற்குச் சமமாகும்.
எனவே எனது உயிருக்கினிய மாணவக்கண்மணிகள் அனைவரும் அச்சமின்றி தேர்வெழுதுங்கள்!
தேர்வில் வெற்றி பெற உங்கள் ஒவ்வொருவருக்கும் எனது அன்பு நிறைந்த நல்வாழ்த்துகள்!


