மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதியைச் சேர்ந்த, நாம் தமிழர் கட்சி – திருமங்கலம் தெற்கு ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி ஆலம்பட்டி சக்திவேல் அவர்களின் தந்தையார் ஐயா சண்முகம் அவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன்.
ஐயா சண்முகம் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா சண்முகம் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!



