முகப்பு செந்தமிழன் சீமான் சமூக ஊடகப் பதிவுகள்

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி, 97வது மாநகராட்சியின் செயலாளர்…

0

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதி, 97வது மாநகராட்சியின் செயலாளர் அன்புத்தம்பி பிரதீப் அவர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட வன்முறைக்கும்பல் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாது, கொடுந்தாக்குதல்கள் மூலம் முடக்க நினையும் வன்முறையாளர்களின் இக்கொலைவெறிச்செயல்களை எதன்பொருட்டும் அனுமதிக்க முடியாது.

ஆகவே, இவ்விவகாரத்தில் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வன்முறையை ஏவிய சமூக விரோதிகளை உடனடியாகக் கைதுசெய்து சிறைப்படுத்த வேண்டுமெனவும், கோவையில் தொடர்ந்து வரும் இத்தகைய வன்முறை வெறியாட்டங்களைத் தடுத்து நிறுத்தாவிட்டால், நாம் தமிழர் கட்சி உரிய எதிர்வினையாற்றுமெனவும் தமிழக அரசை எச்சரிக்கிறேன்.

– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்தி#நூல்_பரிந்துரை 05 திராவிடம் குறித்த மீளாய்வுக் கருத்தாடல்கள் தொகுப்பாசிரியர்: மகாராசன்…
அடுத்த செய்திவீட்டுவேலைக்காகச் சென்ற இளம்பெண்ணைக் கொடூரமாகத் தாக்கி, தினந்தோறும் துன்புறுத்திய சட்டமன்ற…