தனித்துவமிக்க நகைச்சுவை நடிப்பால் மக்களை மகிழ்வித்த திரைக்கலைஞர், தொப்புள்கொடி ஈழத்தமிழ் உறவு, அன்புச்சகோதரர் போண்டா மணி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன்.
சகோதரர் மணி அவர்களின் மறைவால் துயருற்றுள்ள அவர்தம் குடும்பத்தினருக்கும், திரைத்துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.



