இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தொகுதியைச் சேர்ந்தநாம் தமிழர் கட்சியின் நா.வலையனேந்தல் கிளைச் செயலாளர் அன்புத்தம்பி ம.கவிதாஸ் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா உ.மலைச்சாமி அவர்கள் மறைவெய்தினார் எனும் துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பேரன்புகொண்டு நேசித்த தந்தையை இழந்து வாடும் தம்பிக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நண்பர்களுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் என்னுடைய ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
ஐயா மலைச்சாமி அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி


