நிர்வாகக் குழுவினரும் ரென்னிடம் தூண்களை அமைக்கச்சொல்லி வேண்டுகோள் வைக்கவே அங்கு இரண்டு தூண்களைக் கட்டினார் ரென்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த தேவாலயத்தைப் புதுப்பிக்கும் பணி நடந்தது.
அப்போதுதான் ஒரு அதிர்ச்சிகரமான காட்சியை அங்கிருந்தவர்கள் கண்டனர்.
கடைசியாகக் கட்டப்பட்ட அந்த இரண்டு தூண்களும், மேல் தளத்துடன் இணைக்கப்படாமல், இரண்டடி இடைவெளியில் தனியாக நின்றிருந்தது.
மற்றவர்களின் திருப்திக்காக ரென் அந்த தூண்களைக் கட்டியிருந்தாரே தவிர, அந்தத் தூண்கள் கட்டிடத்தைத் தாங்கவில்லை.
என்றாவது ஒருநாள் உரியவர்கள், மக்கள் உண்மையை உணர்ந்து தன்னைப் பாராட்டுவார்கள் என்று ரென் நம்பினார். அதுதான் நடந்தது.
அதைப்போல, தேவைப்பட்டால் பிறரையும் நம்பக்கூடிய தைரியம் நமக்கு வரவேண்டும்.



