தனது செயல்பாடுகளிலே நம்பிக்கை இல்லாதவர்கள், பிரச்சனைகள் வரும்போது தடுமாறுவார்கள்.
பிறர் நம்மை விமர்சனம் செய்யும்போது, நமது செயல்பாட்டைப் பற்றி நமக்கே ஒரு நல்ல தெளிவும் உறுதியும் இருந்தால்தான் விமர்சனங்களை நம்மால் வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும்.
நாம் சரியாக இல்லையோ? என்று நம்மை நாமே சந்தேகப்பட்டுக்கொள்ள ஆரம்பித்தால், எதிரிகள் நம்மை எளிதாக அமுக்கிவிடுவார்கள்.
தனது தொழிலின் மீது அபார நம்பிக்கை வைத்திருந்த ஒருவர், உலகப் புகழ்பெற்ற கட்டடக்கலைஞர் கிறிஸ்டோபர் ரென். லண்டனில் ஒரு தேவாலயத்தைக் கட்டுவதற்கான பொறுப்பை அவரிடம் கொடுத்திருந்தனர்.
அவரும் அதைச் சிறப்பாகக் கட்டினார். தூண்கள் இல்லாமலேயே, உறுதியாக நிற்கும்படி வித்தியாசமாக அமைக்கப்பட்டிருந்தது அந்த அரங்கு.
இந்த சாதனையைப் பொறுக்க முடியாத சிலர், அதற்கு தூண்களை அமைக்கச்சொல்லி வற்புறுத்தினர்.
நிர்வாகக் குழுவினரும் ரென்னிடம் தூண்களை அமைக்கச்சொல்லி வேண்டுகோள் வைக்கவே அங்கு இரண்டு தூண்களைக் கட்டினார் ரென்.


