தென்காசியிலிருந்து உதகைக்கு சுற்றுலா வந்த பயணிகளின் வாகனம், திரும்பும்வழியில் குன்னூர் மலைப்பாதையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் உயிரிழந்துள்ளதுடன், 30 பேர் படுகாயமுற்ற செய்தியறிந்து
மிகுந்த மனவேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு துயர் துடைப்பு நிதியாக 10 இலட்சம் ரூபாய் வழங்க வேண்டுமெனவும், காயமடைந்தவர்களுக்கு உயர் மருத்துவம் அளித்து விரைந்து நலம்பெறச் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை கேட்டுக்கொள்கிறேன்.
@CMOTamilnadu @mkstalin


