மனத்திலே விதையுங்கள் தன்னம்பிக்கை விதைகளை. விருட்சமாக வளருங்கள்.
மற்றவர்களுக்கு வழிகாட்ட நீங்கள் பிறந்திருக்கும்போது, உங்களுக்கு வழிகாட்ட யாரைத் தேடுகிறீர்கள்?
எழுந்திருங்கள். உலகம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது.
சோம்பி இருந்தால் பின்னர் தேம்பி அழ வேண்டி வரும்.
இன்றே சுறுசுறுப்பு நெருப்பில் சோம்பலைச் சாம்பலாக்கு.
வறுமையை ஒப்புக்கொள்வதில் இழிவில்லை. ஆனால், அந்த வறுமையைக் கடக்க முயற்சி செய்யாமல் இருப்பதே இழிவு.
– முனைவர் மு.க.அன்வர் பாஷா


