தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தைச் சேர்ந்த அன்புச்சகோதரர் ஆசிரியர் சேது செல்வம் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்!
அறிவும், ஆற்றலும் மிகுந்ததாக வருங்கால தமிழிளம் தலைமுறையை உருவாக்கும் பெரும்பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியப் பெருமக்களின் உரிமைகளை வென்றெடுக்கவும், மாணவச்செல்வங்களின் கற்கும் திறனை செழுமையுறச்செய்யவும் தங்கள் பதவிக்காலத்தில் உறுதியாக முயல்வீர்கள் என்று முழுமையாக நம்புகிறேன்!
சிறப்புற செயலாற்றி சிகரம் தொட எனது அன்பும், வாழ்த்துகளும்!


