அறிவிப்பு: மாற்றுக் கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வு (பிப்.12, வாலாஜா)

1048

க.எண்: 2023020056

நாள்: 08.02.2023

அறிவிப்பு:
மாற்றுக் கட்சியினர் நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வு (பிப்.12, வாலாஜா)

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறவுகள் மாற்றுக் கட்சிகளில் இருந்து வெளியேறி, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு, வருகின்ற 12-02-2023 ஞாயிற்றுக்கிழமையன்று மாலை 05 மணியளவில், இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாவில் அமைந்துள்ள தங்கராஜ் பேலஸ் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

மாற்றுக் கட்சியினர்
நாம் தமிழர் கட்சியில் இணையும் நிகழ்வு
12-02-2023 ஞாயிற்றுக்கிழமை, மாலை 05 மணியளவில்

எழுச்சியுரை:
செந்தமிழன் சீமான்
இடம்:
தங்கராஜ் பேலஸ்
(ஏ.ஏ.ஏ. மகளிர் கல்லூரி அருகில்)
வாலாஜா
இராணிப்பேட்டை மாவட்டம்

இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

முந்தைய செய்திமுக்கிய அறிவிப்பு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் – 2023 | வட்டவாரியாக தேர்தல் பணிக்குழு அமைப்பு
அடுத்த செய்திபோளூர் சட்டமன்ற தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு