ஈரோடு கிழக்கு தொகுதியின் பொருளாளர் என் ஆருயிர் தம்பி லோ.கார்த்திகேயன் மற்றும் அவருடைய உடன் பிறந்த அண்ணன் கௌதம் ஆகிய இருவரும் படுகொலை செய்யப்பட்ட செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரும் அடைந்தேன். (1/3)

தம்பி கார்த்திகேயனின் இழப்பென்பது வளர்ந்துவரும் தமிழ்த்தேசிய அரசியல் களத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும். தம்பியின் பெற்றோர்க்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கட்சி உறவுகளுக்கும் ஆறுதலைத் தெரிவித்து, துயரில் பங்கெடுக்கிறேன்.
தம்பிகள் இருவருக்கும் எனது கண்ணீர் வணக்கம்!

