சுயமரியாதைச்சுடரொளி வழக்கறிஞர் சிவகங்கை எஸ்.இராமச்சந்திரனாரின் மருமகளும், அ.தெக்கூர் சிந்தனை விருந்தகம் தியாகராசன் அவர்களின் மனைவியும், தனித்தமிழர் சேனை நிறுவனர் க.நகைமுகன் மற்றும் ஊடகவியலாளர் ஐயா அரப்பா அவர்களின் தாயும், (1/3)

என் அன்புத்தம்பிகள் சே.பாக்கியராசன் மற்றும் சே.பிரபு ஆகியோரின் பாட்டியாருமான பெருமதிப்பிற்கும் பேரன்பிற்கும் உரிய பாட்டி சரசுவதி தியாகராசன் அவர்கள் இயற்கை எய்திய துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையுற்றேன்.
(2/3)
அன்னையை இழந்து வாடும் ஐயா அரப்பா, அம்மாக்கள் தியாகவதி மற்றும் கிருஷ்ணம்மாள் அவர்களுக்கும், குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து, துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
பாட்டி சரசுவதி தியாகராசன் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(3/3)


